Posts

இந்திய பட்ஜெட் 2026-27: ஒரு அலசல்

Image
 இந்திய அரசாங்கம் 2026-27 ஆம் ஆண்டிற்கான தனது வரவு-செலவுத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை இலக்காகக் கொண்டு, பெரும் நிதி ஒதுக்கீடுகளுடன் இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.  1. பட்ஜெட்டின் பிரம்மாண்டம் (The Big Picture) இந்த ஆண்டிற்கான மொத்த பட்ஜெட் மதிப்பு ₹53,47,315 கோடி ஆகும். கடந்த ஆண்டுகளை விட இது கணிசமான உயர்வு. அரசாங்கம் இந்த நிதியை இரண்டு முக்கிய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது: நாட்டின் உள்கட்டமைப்பை (Infrastructure) மேம்படுத்துதல். சமூக நலத் திட்டங்கள் மூலம் மக்களுக்கு உதவுதல். 2. வரவு: பணம் எங்கிருந்து வருகிறது? (Where the Money Comes From) அரசாங்கத்தின் மொத்த செலவான ₹53.47 லட்சம் கோடியைச் சமாளிக்க, வருமானம் பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளது: வரி மற்றும் இதர வருவாய் (Revenue Receipts): அரசாங்கத்தின் சொந்த வருமானம் ₹35,33,150 கோடி ஆகும். இதில் ஜிஎஸ்டி (GST), வருமான வரி (Income Tax) மற்றும் கார்ப்பரேட் வரி ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. கடன் (Borrowings - Fiscal Deficit): வருமானம் போக, மீதமுள்ள ₹16,95,768 கோடியை அரசாங்க...

இது வரலாற்று சிறப்புமிக்க நாள் அல்லவா

Image
தமிழருவி மணியன் தொடங்கிய காமராஜர் மக்கள் கட்சியும், ஜி.கே. கருப்பையா மூப்பனார் அவர்கள் தொடங்கிய தற்போது அவரது புதல்வர் ஜி.கே. வாசன் அவர்களால் வழிநடப்பட்டு வரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் ஒன்றிணைந்து தமிழ் மாநில காங்கிரஸ் என்ற ஒரே அரசியல் கட்சியாக பரிமாணம் அடைந்திருக்கிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில் இரண்டு கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். காந்திய மக்கள் இயக்கத்தையும், பின்னர் காமராஜர் மக்கள் கட்சியையும் வழிநடத்தி வந்த தமிழருவி மணியன் அவர்கள் ஊழல் கறைப்படியா, அப்பழுக்கற்ற உண்மையான காந்தியவாதி என்பதை நாம் அறிவோம்.  தமிழ்மணி அவர்களுக்கும் எனக்கும் பிரிக்க முடியாத பந்தம் உள்ளது திராவிட இயக்கக் கொள்கைகளில் மனதை தொலைத்த என்னை, அவருடைய பேச்சும் எழுத்தும் ஆன்மீக மற்றும் தேசிய அரசியல்நோக்கி நகர்த்தின. நண்பர்களே அது இத்தகைய தருணம் என்றால் பரந்தாமன் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தது போல், புத்தர் சீடர்களுக்கு தம்மத்தைப் போதித்தது போன்ற அனுபவத்துக்கு இணையானது என்றே நான் உணர்கிறேன். இத்தகைய மாமனிதர் இன்று வரலாற்று சிறப்பு...

மதுரை மக்களவை தொகுதியில் வெல்லப் போவது யார் ?

Image
தமிழக அரசியலில் மதுரை திருப்புமுனை நகரமாகவும் அரசியல் மாற்றத்தை தீர்மானிக்கும் நகரமாகவும்  கருதப்படுகிறது  மதுரை தொகுதி ஆனது காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் அதிமுக மற்றும் திமுக செல்வாக்கு மிகுந்த  தொகுதியாகும்  இதுவரை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 8 முறையும் கம்யூனிஸ்ட் 5 முறையும் அதிமுக மற்றும் திமுக தலா 1 முறையும் களத்தில் நேரடியாகவும் மற்றும் கூட்டணி சார்பாகவும் போட்டியிட்டு வெற்றியை பதிவு செய்துள்ளது  இந்த மக்களவைத் தொகுதியில் மதுரை வடக்கு மதுரை கிழக்கு மதுரை தெற்கு மதுரை மேற்கு மதுரை மத்தி மற்றும் மேலூர் என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன்   இதில் மதுரை கிழக்கு மதுரை தெற்கு மதுரை வடக்கு மற்றும் மத்திய மதுரை என 4 தொகுதிகளில் திமுகவும் மேலூர் மற்றும் மதுரை மேற்கு ஆகிய 2 தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது மதுரை தொகுதியில் I.N.D.I.A சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் அவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு  உள்ளது  இவர் கடந்த  முறை நடந்த மக்களவைத் தேர்த...

தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் வெல்லப் போவது யார் ?

Image
தஞ்சாவூர் தொகுதி ஆனது திமுக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் செல்வாக்கு மிகுந்த  தொகுதியாகும்  தஞ்சாவூர் தொகுதியில் I.N.D.I.A சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முரசொலி அவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது  இந்த மக்களவைத் தொகுதியில் மன்னார்குடி திருவையாறு தஞ்சாவூர் ஒரத்தநாடு பட்டுக்கோட்டை பேராவூரணி என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன  இவைகளில் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி தவிர்த்து அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது  ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஒருங்கிணைந்த அதிமுக வேட்பாளர் வைத்திலிங்கம் அவர்கள் தற்போது ஓபிஎஸ் அணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த தொகுதியில் திமுகவிற்கு 25 முதல் 35 சதவீதம் வரை நிரந்தரமான வாக்கு வங்கி உள்ளது  இதுவரை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 7 முறையும் அதிமுக 2 முறையும் களத்தில் நேரடியாக போட்டியிட்டு வெற்றியை பதிவு செய்துள்ளது  மற்றும் காங்கிரஸ் ஆனது 3 முறை நேரடியாகவும்  3 முறை அதிமுகவுடனும் மற்றும் ஒரு முறை திமுகவுடனும் ...

யாம்யறிந்த ராமானுஜர்

Image
அரங்கன் இலக்கணம் யறிந்து சமத்துவ இலக்கியம் படைத்தார் யாம்யறிந்த ராமானுஜர்

அதானி குழுமத்தில் முதலீடு செய்து எல்.ஐ.சி நிறுவனமானது தனது முதலீட்டு இழந்ததா

Image
அதானி குழுமத்தில் முதலீடு செய்து எல்.ஐ.சி நிறுவனமானது தனது முதலீட்டு இழந்ததா என்றால் இல்லை என்பதே பதிலாகும்  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக எல்ஐசி நிறுவனமானது அதானி குழுமத்தில் 30தாயிரத்தி 127 கோடி ரூபாய் முதலீடு செய்தது அதானி குழும பங்குகளின் அசுர வேகத்தில் எல்.ஐ.சி நிறுவனத்தின் முதலீடும் அதிக அளவு லாபத்தை ஈட்டியது  அதாவது ரூபாய் 30127 கோடி ரூபாய் முதலீடு ஆனது 72000 கோடி அளவுக்கு உயர்ந்தது எல்.ஐ.சி நிறுவனம் முதலீடு செய்த தொகையை விட இரண்டு மடங்கு உயர்ந்தது  ஆனால் சில தினங்களுக்கு முன்பாக அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க்  ஆய்வறிக்கையில் அதானி குழுமம் பங்குச்சந்தையில் முறைகேடு செய்திருப்பதை சுட்டி காட்டியது இதனால் அதானி குழும பங்குகள் சந்தையில் சருக்களை சந்தித்தது அதில் எல்.ஐ.சி முதலீடு செய்திருந்த முதலீடும் சரிவை சந்தித்தது  நேற்றைய நிலவரப்படி எல்.ஐ.சி நிறுவனம்  56000 ஆயிரம் கோடி ரூபாயில் வர்த்தகத்தை நிறைவு செய்தது இப்பொழுதும் எல்.ஐ.சி நிறுவனம் செய்த முதலீடு லாபத்தில்  தான் உள்ளது #LIC #AdaniGroup

மேத்தா 90களில் செய்த பங்குச்சந்தை ஊழலை தான்

Image
ஹர்ஷத் மேத்தா 90களில் செய்த பங்குச்சந்தை ஊழலை தான் இப்போது 2020 தொடக்கத்தில்  அதானி  நிறுவனம் செய்துள்ளது  மேத்தாவும் அதானியும் செய்த ஊழலுக்கு பெரிய வேறுபாடு எல்லாம் இல்லை மேத்தா சந்தையில் பட்டியலிடப்பட்ட சிறு நிறுவன பங்கை தேர்வுசெய்து அதில் அதிகமான முதலீடு செய்து  செயற்கையாக அந்தப் பங்கினை சந்தையில் விலை உயரச் செய்வார்  அதே வேலையைதான் அதானியும் கொஞ்சம் நுணுக்கமாக தன் நிறுவன பங்குகளில் வேறு பல நிறுவனங்கள் முதலீடு செய்வது போல் போலி நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் தன் நிறுவன பங்குகளில் முதலீடு செய்து செயற்கையாக சந்தையில் விலை ஏற செய்துள்ளார்