Posts

Showing posts from May, 2020

புத்த பெருமானின் புகழ் நீடுழி வாழ்க

தர்மம் எனும் நிலத்தில் அன்பு என்னும் விதைவிதைத்து ஞானக் கலப்பை கொண்டு ஆசைக் களை எ உழுது கருத்து எனும் எருதை உரமாக்கி உறங்கும் சிந்தனையை எழுப்பி நீர்பாய்ச்சி விளைந்த அன்பை அறிவால் அறுவடைத்து உலகெங்கும் அளவில்லா தானம் செய்து ஆசை மயக்கத்திலிருந்தும் அறியாமையிலிருந்தும் மக்களை விடுதலை செய்த பகுத்தறிவு பகல்வான் புத்த பெருமானின் புகழ் நீடுழி வாழ்க
அறியுண்ட  மெல்லிய உடல் எங்கும் பொன்னிறம்  நீண்ட விரல்கள் அன்னையைப் போல் அரவணைக்கும் கரங்கள் நெஞ்சத்தில் சிங்கத்தைப் போல் சிலிர்த்து எழும் சிந்தனை கணைகள் தொண்டு செய்ய பயணம் செய்யும் கால்கள் அடர்ந்த காடு போல் கருநிற சிகை  ஒளிவீசும்  கருநீலக் கண்கள் சிறு சத்தத்தையும் அளவிடும் அகலக் காதுகள் வெண்ணிற முத்து பற்கள் அதிலிருந்து இசைத்திடும் இனிய குரல்கள் அமைதி ஒளிவீசி அனைவரையும் வசீகரிக்கும் திருமுகம் யென புத்தரின் உருவத்தையும் செயல்பாடுகளையும் கூறுகிறது பல ஆயிரம் ஆண்டுகால வரலாறு

மாமேதை காரல் மார்க்சையும் மார்க்சியத்தையும் என்றும் நினைவு கூறுகவே

மதத்தை விடுத்து மனிதனாய் வாழ்ந்து கடவுளை மறுந்து கருணை செய்து முதலாளித்துவச்  சுரண்டலில்  மண்ணைக் காத்து மனிதரை காத்து படுந்துயர் பசிமிகும் தொழிலாளியை ஒன்றுதிரட்டி பாட்டாளி வர்க்கப் புரட்சி  செய்தோ துயர் போக்கும் உயிர்த் தோழனை பெற்று நல்லதோர் காதல் செய்து அன்பான மனைவியையும் இழந்து  பிள்ளைகளை இழந்து பெரும் துயரில் வாடியும் மார்க்சிய மூலதன நூலை தொகுத்து கம்யூனிச கட்சியை தோற்றுவித்து உலகெங்கும் புரட்சி செய்து உலக முதலாளிகள் ஓரிடத்தில் சேமித்த செல்வத்தை வானளவு மூலதனத்தை பகிர்ந்தளிக்கும் சமதர்ம மார்க்சிய தத்துவத்தின் தந்தை ஓய்வறியா ஒப்பற்ற ஒர்உலகத் தலைவன்  மாமேதை காரல் மார்க்சையும் மார்க்சியத்தையும் என்றும் நினைவு கூறுகவே
பஞ்சம்மென பட்டினியென ஏழையை பிழிந்து செல்வத்தை ஓரிடத்தில் குவித்து மண்ணையும் மனிதனையும் முழுங்கி மானமின்றி அர்த்தமற்று வாழ்ந்த முதலாளித்துவ உறுப்பினர்களின் கருத்தியலை அம்மணமாக்கி பாட்டாளிவர்க்க கம்யூனிச சோசியலிசம் தோற்றுவித்த கம்யூனிசத்தின் மார்க்சிய பொருளாதாரத்தின் தந்தை மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களின் புகழ் வாழ்கவே
அமைதியான அறையில் திசையெங்கும் இருக்கும் புத்தகங்களை வாசித்து நேசித்து இரவா பகலா யென அறியாமல் படித்து உணர்ந்த புத்தக ஆசிரியருடன் மகிழ்வோடு உரையாடி வயிற்றின் பசிமறந்து அறிவின் பசிநிறைந்து தனிமையில் வாழ்வதும் ஒர் தவம்தானே ஒர் வரம்தானே